Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பரமத்திவேலூர்: பிரதோசத்தை ஒட்டி பரமத்தி வேலூரிலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தியில் உள்ள பீமேஸ்வரர் ஆலயம், நடந்தையில் உள்ள சிதம்பரேஸ்வரர் ஆலயம், எல்லையம்மன் கோவிலில் நானூறு ஆண்டுகள் பழமையான ஏகாம்பரம் ஈஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட சிவ ஆலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
பிரதோசத்தை ஒட்டி மாலை 5 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பிரதோஷ விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம், வழங்கப்பட்டது.